மயிலாடுதுறையில் பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த ஆலங்கட்டி மழை..!
மயிலாடுதுறை அருகே பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை பரவலாகக் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ் கட்டி போன்று ஆலங்கட்டி மழை பெய்தது கண்ட சிறுவர்கள் குதுகலத்துடன் மழையில் நனைந்தவாறு அவற்றைப் பொறுக்கி எடுத்து விளையாடினார்.






