கங்கனா முதல் அம்பிகா வரை உதயநிதி பேச்சுக்கு நடிகைகள் கண்டனம்
தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் பெண் நடிகையை குறித்து நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய உதயநிதி ஸ்டாலின், இரட்டை அர்த்த கருத்தை தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நடிகை கங்கனா ரணாவத், குஷ்பூ சுந்தர், பாடகி சின்மயி ஸ்ரீபாதா மற்றும் மூத்த நடிகை அம்பிகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின், காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய போராட்டத்தில் பேசியபோது இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சு முதல்வர் விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் தமிழ் நடிகையை குறிப்பதாக பலரும் புரிந்துகொண்டனர். இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட நடிகை கங்கனா ரணாவத், சட்ட நடவடிக்கையை வரவேற்றார். மேலும், இதுபோன்ற கருத்துகளுக்கு பொதுவெளியில் இடமில்லை என்றும் கூறினார்.
அவர் தனது பதிவில், “அருவருப்பான வார்த்தைகள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச மற்றும் கீழ்த்தரமான நகைச்சுவைகளை பொதுவெளியில் பேசுவது எந்த நாகரிகமான சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த குற்றத்திற்காக உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கலாம். இருந்தாலும் இது ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




