டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. மனுவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி அமர்வு இதனை ஏற்றுள்ளது. பிற்பகலில் தீர்ப்போ அல்லது முக்கிய உத்தரவோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.