--- --:--:-- --

49 பேர் மீது தேச விரோத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

bharathiraja344-20-1490000612

மணிரத்தினம் கோபாலகிருஷ்ணன் தேவதை உள்ளிட்ட 49 பேர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு இயக்குனர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அரசு விமர்சிப்பதால் ஒருவர் தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்று கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது என்று பாரதிராஜா கூறி உள்ளார்.

 

கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் ஆகவே பதிவு செய்யவேண்டும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது மாற்றுக்கருத்து உடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மௌனமாக முயல்வது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon