--- --:--:-- --

திருச்சி : மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி..!

6

லால்குடி அருகே கடையின் மேல்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கும் போது மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியாகி உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகனின் மகன் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது.இந்த நிலையில் பேக்கரி கடையின் மேல் பகுதியில் புதிதாக கடையின் பெயர் பொறிக்கப்பட்ட புதிதாக பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியில் சக்திவேல் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

அப்போது பிளக்ஸ் போர்டில் இருந்த இரும்பு கம்பி கடையின் மேலே சென்ற மின் கம்பியின் மீது பட்டு உள்ளது. இதனால் பிளக்ஸ் போர்டை பிடித்துக் கொண்டிருந்த சக்திவேலின் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் சக்திவேல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

 

இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சமயபுரம் போலீசாருக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர். ஆனால் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon