ஆவடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர்..!
தொழிற்சங்க கோரிக்கையில் samsung தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பட்டாபிராமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட அவர் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆவடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தை சாம்சங் நிறுவனம் ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.






