கூலிப் போன்ற போதை பொருளால் நீதிமன்றம் வேதனை..!
கூலிப் போன்ற புகையிலைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் என அறிவித்து அவற்றை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மற்றும் முன் ஜாமீன் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி தமிழகத்தில் கூலிப் எனும் போதே பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமின் கோரி வழக்குகள் வருவதாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.






