6 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு

ம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் 6 பேரின் வீடுகளை ராணுவம் தகர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

 

நேற்று தீவிரவாதிகள் 4 பேரின் வீடுகளை குண்டுவைத்து ராணுவம் தகர்த்துள்ளது. இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் 6 தீவிரவாதிகளின் வீடுகளை ராணுவம் தகர்த்துள்ளது. மேலும் 18 தீவிரவாதிகள் இன்னும் செயல்படுவதாக ராணுவம் கூறியுள்ளது.