சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!

த்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நுாற்றுக்கணக்கான நக்சல்கள் பதுங்கியிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நக்சல் அமைப்பை வழிநடத்தும் முக்கிய தலைவர்களான ஹிட்மா மற்றும் தேவா ஆகியோர் கர்ரேகுட்டா மலை பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து, கர்ரேகுட்டா மலை மற்றும் அதை ஒட்டிய கிராமங்களை, சி.ஆர்.பி.எஃப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஆகியோர் சுற்றி வளைத்தனர்.சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கர்ரேகுட்டா மலைகளை 6 நாட்களாக பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, நக்சல்கள் தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்துள்ளனர்.

 

மலைப் பகுதியில் 500 முதல் 1,000 நக்சல்கள் பதுங்கியிருக்கலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் தரப்பில் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க மிகவும் ஜாக்கிரதையாக காய் நகர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”முன்பு இந்த இடம் ரகசிய சந்திப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பட்டாலியன் தங்கியிருந்த இடமாக இருந்ததில்லை.

 

ஆனால், தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவர்களை மலைகளுக்குள் தள்ளின. வேறு எங்கும் செல்ல முடியவில்லை,” என்று நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் கூறினார். அடர்ந்த காடுகள் மற்றும் தொடர் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, மாவோயிஸ்டுகளின் பட்டாலியன் எண் 1 இன் தளமாகக் கருதப்படுகிறது. இதில் குறைந்தது 155 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

இதில் 76 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் ஏப்ரல் 6, 2010 அன்று சுக்மாவின் டாட்மெட்லாவில் கொல்லப்பட்டனர்.மாவோயிஸ்டுகள் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நேரத்தில் இந்த நடவடிக்கையும் வருகிறது.

 

2003-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு மீதான தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ் என்ற சதீஷ் என்ற கோபா, பஸ்தர் டாக்கீஸ் என்ற யூடியூப்சேனலுக்கு ஒரு வீடியோ நேர்காணலை அளித்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள், மாவோயிஸ்டுகள் மீண்டும் ஒன்றுகூடுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.