மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அகதிகள் முகாமிற்கு அருகே நடந்த நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் மசூதி மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இதேபோன்று ரஃபா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 14 மாதங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 44,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து காசாவிலும் போர் நிறுத்தம் கொண்டு வர அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மக்களும் போர் நிறுத்தம் ஏற்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






