அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி..!

ரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 36 கோடி ரூபாயை சுருட்டிய தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலக் குமரேசனை போலீசார் கைது செய்தனர்.

 

பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உடந்தையுடன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளோடு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொரு வருடமும் தலா ஐந்து லட்சம் ரூபாய் பாலகுமரேசன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.