ஒருவரை சுட்டுக் கொன்று உடலைக் கட்டி தொங்க விட்ட தாலிபன்கள்..!
ஆப்கானிஸ்தானின் ஹெரத் நகரில் சுட்டுக் கொன்று உயிரிழந்தவர்களை தாலிபன் அமைப்பினர் கிரைனில் கட்டி தொங்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள மயானத்திற்கு உயிரிழந்த 4 பேரின் உடல்களை பெண்களிடம் எடுத்து வந்து பின்னர் அதிலிருந்து ஒரு உடலை மட்டும் அவர்கள் ராட்சத கிரேனில் கட்டித் தொங்க விட்டுள்ளனர்.
மீதமுள்ள மூன்று உடல்கள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் நான்கு பேரும் கடத்தலில் ஈடுபட்ட போது சிக்கியதாக தெரிவித்தனர். கொடிய தண்டனைகளை தாலிபான்கள் கொடுத்ததால் அந்த காட்சியை பார்த்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.






