திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு! 50% தள்ளுபடி விலை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்கப்படும் உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பாதி விலையில் அதாவது 25 ரூபாய்க்கு ஆந்திரத்தில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் லட்டு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

மொத்தமாக லட்டு தேவைப்படுவோர் ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத் லட்டு தயாரிப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திலும் லட்டு விற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.


Leave a Reply