சேலம் அருகே அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதனாலும், நடக்க முடியாமல் போனதாலும் முதிய தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சித்தீஸ்வரர் கோயில் மலைப்பகுதியில் எடைப்பாடி கவுண்டன் பட்டியை சேர்ந்த நல்லாக் கவுண்டர், அருக்காணி தம்பதி மருமகள் மற்றும் இரண்டு பேரப் பிள்ளைகளுடன் வசித்து வந்தனர்.
நல்லாக்கவுண்டருக்கும், அருக்காணிக்கும் முதுமையின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் நடக்க முடியாமலும் இருவரும் சிரமப்பட்டு உள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த தம்பதி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இரும்பாலை போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.