பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 16 வயது சிறுவன் கைது

சென்னை தாம்பரம் அருகே வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.வீட்டின் அருகே 4 வயது சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்ததாகவும் அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

 

சிறுமியின் அழுகுரல் கேட்டு அவரது தாயார் வந்து பார்த்து சிறுமியை மீட்டு சென்றுள்ளார். தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அவரது தாயார் இதுகுறித்து சோமங்கலம் போலீசாரிடம் புகார் அளிக்க சிறுவனை கைது செய்து விசாரணை செய்து அவர்கள் மேல் விசாரணைக்காக சிறுவனை ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Leave a Reply