ஐநாவில் புறநானூற்றுப் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு

சமத்துவ உலகம் மலர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி ஐநா பொது அவையில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொது அவை கூட்டத்தில் உரையாற்றினார்.

 

சுகாதாரத் துறையின் இந்திய அரசு மேற்கொண்ட சாதனைகளை பட்டியலிட்டு அவர் ஐந்து ஆண்டுகளில் 11 கோடிகளை நாடு முழுவதும் கட்டி இருப்பதாகவும், இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகுக்கும் உந்து சக்தியாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலையும் ஐநா அவையில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிப் பேசினார். பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே சவாலானது அல்ல என்றும் ஒட்டுமொத்த உலகுக்கும் மனித சமூகத்திற்கும் சவாலானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆகையால் பயங்கரவாதத்தை வேரறுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பாகிஸ்தானில் நேரடியாக பிரதமர் மோடி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு உரையை முடித்துக்கொண்டார். முன்னதாக ஐநா தலைமையகத்திற்கு வெளியே காத்திருந்த காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டி பிரதமர் மோடிக்கு ஆதரவாக உற்சாக குரல் எழுப்பினர்.


Leave a Reply