தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஆதரவற்றோர் இறுதிச் சடங்கிற்காக கார் ஓட்டுனர் அளித்த உதவி தொகை அவரது இறுதிச் சடங்கிற்கு பயன்பட்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆதரவற்றோர் இறுதிச் சடங்கிற்காக கார் ஓட்டுநரான விஜய் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி விஜய் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்ததற்கு பாராட்டு குவிந்தது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தில் படுத்து விஜய் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஆதரவற்ற தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் கொடுத்த பணத்தை கொண்டு அவரது இறுதி சடங்கு செய்துள்ளனர்.






