இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் அலிமுல் முர்ஷார். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் நிமித்தமாக தங்கி உள்ளார். உடல் நலம் பாதித்த இவரது தாயார் இராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவரை பார்க்க சென்னை – இராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவு பெட்டி எண் 2 -ல் 67வது இருக்கையில் நேற்று இரவு பயணித்தார்.
இன்று காலை, இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அலிமுல் முர்ஷார், தாயார் மருத்துவ செலவுக்கு எடுத்து வந்த ரூ.ஒரு லட்சத்துடன் பணப்பையை தவற விட்டார். இது குறித்து இராமநாதபுரம் பிளாட்பார்மில் பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து, ரயிலில் பணியிலிருந்த போலீசார் அலிப் கான், ஆதிமூலம் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதன்படி விரைந்து செயல்பட்ட போலீசார், அலிமுல் முக்தார் பயணித்த பெட்டியில் கிடந்த பணப் பையை கைப்பற்றினர். ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் சென்ற அலிமுல் முர் ஷாரிடம் ரூ.ஒரு லட்சத்தை அலிப் கான், ஆதிமூலம் ஆகியோர் ஒப்படைத்தனர். அலிப் கான், ஆதிமூலம் ஆகியோரை , காவல் உதவி ஆய்வாளர்கள் தனிக் கொடி, சுரேஷ் ஆகியோர் பாராட்டினர். தவற பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு அலிமுல் முர் ஷார் நன்றி தெரிவித்தார்.