பொள்ளாச்சிக்கு பெயர்ச்சியான சனி! அடுத்தடுத்து அரங்கேறும் பலாத்கார கொடூர கொலை? கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

கல்லூரி மாணவி அரை நிர்வாண கோலத்தில் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மாணவியின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை தேடினார்கள். ஆனால் மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து கோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதற்கிடையில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரள மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண் ரோட்டோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார். இதையடுத்து தனது கணவர் கார்மேகத்தை காரை நிறுத்த சொல்லி விட்டு, இறங்கி சென்று பார்த்தார்.

அப்போது அவர் இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார்.

இதைதொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் பூசாரிபட்டிக்கு விரைந்து வந்தனர். தங்களுடைய மகள் பிரகதிதான் என்பதை அறிந்து கதறிதுடித்தனர்.

மாணவி பிரகதியை, உறவினர் நாட்டுதுரை என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆகவே அவருக்கு திருமணம் செய்ய, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இந்தநிலையில் மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுத்துரை ஆகியோர் கதறி அழுதனர். பிரகதி கழுத்தில் கிடந்த நகை, காதில் இருந்த கம்மல் ஆகியவை திருடுபோகவில்லை. இதன் காரணமாக இந்த கொலை நகைக்காக நடக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

அவரது கழுத்து அறுக்கப்பட்டு, ஆடைகள் கலைந்த நிலையில் நிர்வாண நிலையில் கிடந்து உள்ளார். எனவே அவரை மர்ம ஆசாமிகள் கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது காரில் கடத்தி சென்று, மானபங்கம் செய்து கொன்று உடலை பூசாரிபட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.

இதற்கிடையில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் காரில் மாணவியை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதைதொடர்ந்து அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இதனை விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதனிடையே கல்லூரியில் இருந்து வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் பின் தொடர்ந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக 2 பேர் சிக்கியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் சதீஷ் என்பவர் பிடிபட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளி பிடிக்க போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply