சூலூர் அருகே சிறுவர்கள் தகராறில் முதியவர் கொலை

சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41 ). கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா(31) என்ற மனைவியும்,7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எட்வின் (48) கட்டிட மேஸ்திரி. இவருக்கு3 மகன்கள் உள்ளனர். நேற்று எட்வினின் இளைய மகன், கிருஷ்ணகுமாரின் மகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்பொழுது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருஷ்ணகுமாரின் மகன் தனது தாய் கல்பனாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கல்பனா அவரது தந்தை நாகராஜ் (56) ஆகியோர் எட்வினின் வீட்டுக்கு சென்று சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் (29) ஆகியோர் சேர்ந்து அங்கு இருந்த உருட்டு கட்டையால் நாகராஜன் தலையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பயந்த எட்வின் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இந்த தகவல் கிடைத்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்தனர். பின்னர் இறந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து சோமனூர் பகுதியில் பதுங்கி இருந்த எட்வின், அவரது மகன் பிரபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்


Leave a Reply