இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7,000 கோடி கடன்: தமிழ்நாடு அரசு முடிவு
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.7,000 கோடி கடன் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் கூட்டுறவுத் துறை மூலம் இந்தக் கடன்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் தலைமையில் வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






