ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே கணக்கரசம்பாலையத்தில் வளைவுகளில் திரும்பும் போது லாரி நிலை தடுமாறி கவிழ்ந்ததில் சாலையின் ஓரம் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பவானி சாகர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லிற்கு அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றது.வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறிய லாரி அப்போது சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது கவிழ்ந்தது.