மதுரை சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு, கொசு உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தேவையற்ற பழைய பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் ஒர்க் ஷாப் நிறுவனத்திற்கும் பத்தாயிரம் அபராதம் விதித்தது மதுரை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






