ரூ.1,000 உரிமைத் தொகை – உதயநிதி

களிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக DCM உதயநிதி தெரிவித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

 

அலட்சியமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விடுமுறை நாளில் வேலை செய்தால் ரூ.1,000..!

முதல்வர் மருந்தகங்கள் முறையாக இயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

 

மேலும், விடுமுறை தினங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000… அரசு முக்கிய அறிவிப்பு

10-ம் வகுப்பு பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டத்திற்கான தேர்வுமுடிவு நாளை (ஜூன் 12) வெளியாகவுள்ளது. இதற்கான திறனாய்வுத் தேர்வை 1,43,351 மாணவர்கள் எழுதினர்.

 

தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை வெளியாகிறது. இதில், தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு (500 மாணவர்கள் + 500 மாணவிகள்) இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ₹1,000 அரசு வழங்கும்.


பொங்கலுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000..!

பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

 

அப்போது பேசிய அவர், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000-ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.


ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான பயனாளிகள் நீக்கம்?;

களிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.


மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால் டிக்கெட்

நாடு முழுவதும் 9- 12ஆம் வகுப்பு வரை சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

 

இதற்காக 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் மட்டும் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வு பிப்.22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நாளை dge.tn.gov.in-இல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.


9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000..!

த்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

 

இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, நமது மாநிலத்தில் இருந்து 6,695 பேர் உள்பட 1 லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஜன.24க்குள் விண்ணப்பிக்கலாம்.


ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000..!

ன.14 பொங்கல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு TN அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதற்காக கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.