குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மூலம் பணம் பெற்றதாக புகார்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பூமாரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை செய்துள்ளார்.

 

தற்பொழுது திருப்பூரில் வேலை பார்த்து வரும் இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் முதன்மை நீதிமன்ற அனுமதியுடன் ஆறு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் பெற்று வந்ததாக எழுதப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.