தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரிப்பு..!

மிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்திலிருந்து 74 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

 

புதிதாக உருவாக்கப்படும் 6 ஆயிரம் வாக்குச்சாவடிகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வாக்குச்சாவடிகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 

வாக்குச்சாவடி அலுவலர்களாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக அர்ச்சனா பட்நாயக் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு..!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவின், மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அட்லஸ் மலைத்தொடர் உள்ளது. இதனை ஒட்டிய நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின் படி ரிக்டர் அளவில் 6.8-ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

 

பலரும் தூக்கத்தில் இருந்த போது கட்டடங்கள் குலுங்கின. இதில் ஏராளமான வீடுகள் நொடிப்பொழுதில் உடைந்து விழுந்தன. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி +212 661 129 7491 என்ற எண்ணுக்கு மொராக்கோவில் உள்ள இந்தியர்கள் அழைக்கலாம் என்று அங்குள்ள இந்திய தூதரம் தெரிவித்துள்ளது.