மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதையடுத்து மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் விசாரிக்க கூடாது என்றும் பாஜக தலைவர்கள் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நீதிபதி குறித்து அவதூறான குற்றச்சாட்டு கூறியதற்காக மம்தா பானர்ஜி 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விலகுவதாகவும் அறிவித்தார்.