பெண் குழந்தை பிறந்ததால் திட்டிய கணவர்..! குழந்தையை விட்டுச் சென்ற தாய்..!

திருச்சி அருகே கணவர் திட்டியதால் குழந்தையை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் குழந்தையை தேடி வந்துள்ளார். மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு துண்டை விரித்து அதில் வைத்து விட்டு குழந்தையின் தாய் சென்றுவிட்டார்.

 

குழந்தையை மீட்ட மருத்துவமனை நிர்வாகம் விட்டு சென்ற தாயை தேடி வந்தனர். இதனிடையே குழந்தையை விட்டு சென்றது மணப்பாறை அடுத்த அம்மா சத்திரம் புதூரைச் சேர்ந்த தனலட்சுமி என தெரியவந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் தமிழரசன் திட்டியுள்ளார்.

 

இதனால் குழந்தையை தனலட்சுமி விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. செய்தியை பார்த்துவிட்டு மனம் கேட்காமல் மீண்டும் திரும்பி வந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.

 


பெண் குழந்தை பிறந்ததால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!

சேலத்தில் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஆகாது எனக் கூறி தன்னையும் குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளார்.

 

சேலம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், கௌசல்யா ஆகியோருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கௌசல்யா கர்ப்பம் தரித்துள்ளார்.

 

நான்காவது மாதம் நிறைவடைந்த நிலையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லது அல்ல என கூறி வெங்கடேசனும் அவரது குடும்பத்தாரும் கவுசல்யாவை கொடுமைப்படுத்தி வயிற்றில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

அதையும் தாண்டி அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த நேரம் சரியில்லை எனக் கூறி இருவரையும் வெங்கடேசன் வீட்டை விட்டு வெளியேற்றியதாக செல்லப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.