சென்னை ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் புறநகர் ரயிலில் இருந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.
இதையடுத்து படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் படியில் பயணம் செய்பவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போர் மீது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






