அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!

மிழகத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த தேர்வுகள் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளிலிருந்து ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாள் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 


அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லையா..?

டப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரொனா தொற்று குறைந்துள்ளதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

 

கடந்த மாதம் பருவமழை பாதிப்பால் பள்ளிக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பாடத்திட்டத்தை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டம் நடத்த அவகாசம் தரும் வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.