தமிழகத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகள் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளிலிருந்து ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாள் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.