நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் விஷம் குடித்து தற்கொலை..!
ஆத்தூர் அருகே மாணவன் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தவறான முடிவுகள் எடுக்க கூடாது எனவும் எடப்பாடிபழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் மாணவர் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு செய்தியை கேட்டு மிகவும் துயருற்றதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.






