மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
திருச்சியில் மளிகை கடை உரிமையாளர் மாடு முட்டி தலையை சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் 42 வது வார்டு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ஸ்டீபன் என்பவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





