பெற்றோரை புறக்கணித்தால் சம்பள பிடித்தம் – ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
அரசு பணியாளர்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால் சம்பளத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும் அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.





