பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி அருகே உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் சாமுவேலை கைது செய்தனர்.





