கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் அகற்றம்..!
மும்பையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன.4, 6, மற்றும் 16 வயது உடையவர்கள் என்றும் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் போர்டிஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும், இரண்டு சிறுமிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த தோற்று அதிர்ஷ்டவசமாக அவர்களின் மூளைக்கு செல்லும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்களை அகற்றி உயிரை காப்பாற்றி விட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.






