எலியை கொடூரமாகக் கொன்ற இளைஞர் மீது வழக்கு பதிவு..!
உத்திர பிரதேசத்தில் எலி வாலின் கல்லை கற்றி வாய்க்காலில் வீசி கொன்றதாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காவல் நிலையத்திற்கு உயிரிழந்த எலியுடன் வந்த எலி நல ஆர்வலரான விஜேந்திர ஷர்மா எலியை சித்திரவதை செய்து கொன்றதாக மனோஜ் குமார் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து மனோஜ் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எலிகள் விலங்குகள் நலப்பிரிவின் கீழ் வராததால் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இந்த ஆண்டு பொருந்தாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.





