--- --:--:-- --

தீடீரென மேடையில் கதறி அழுத நடிகை சினேகா..!

12

மிழ் சினிமாவில் தனது சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்று பேரெடுத்தவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

நடிகை சினேகா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வரும் ஞாயற்று கிழமை அன்று ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதில், தீடீரென யாரோ ஒருவரை பார்த்து, கதறி அழுகிறார் நடிகை சினேகா. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Right Menu Icon