ரயிலில் இருந்து தவறி விழுந்த தாய், சேயை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்..!
மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த தாய் மற்றும் சேயை பத்திரமாக காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். தாயாரை வழியனுப்ப ரயில் நிலையம் வந்த அவரது மகள் கவிதா தாயாருடன் ரயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் .
ரயில் புறப்பட்டது. கைக்குழந்தையுடன் வேகமாக ரயிலை விட்டு இறங்கி முயற்சித்த கவிதா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுதீப்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்று தாயையும் சேயையும் பத்திரமாக மீட்டார்.
இதுதான் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தன் உயிரை பணயம் வைத்து தாய்-சேய்யை காப்பாற்றிய சுதீப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





