இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் – டி.கே.எஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “கூட்டணி குறித்து சுமூகமாக முடிக்கத்தான் எங்கள் தலைவர் விரும்புவார்.

 

இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்” என்று கூறியுள்ளார்.