திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் கே.என்.நேரு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை அமைச்சர் கே என் நேரு கவனித்து வந்தார் அப்போது அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கே.என் நேரு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர் சிகிச்சை முடிந்து விரைவில் அமைச்சர் கே.என் நேரு வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள் :
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!
இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்
ஆன்லைனில் துன்புறுத்துவதும் ராகிங் தான்: பல்கலைக்கழக மானிய குழு
கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்