மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நாகப்பாம்பு!

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த 7 அடி நீளமான நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவிகளில் 90 சதவீதம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் சில மாணவிகளே விடுதியில் உள்ளனர். அப்போது விடுதிக்குள் சுமார் 7 அடி நீளமான நாகப் பாம்பு நுழைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply