அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கையில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஏன் விதிகள் வகுக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 207 இடங்களும் எடுக்கப்படாததால் அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன.

 

அந்த இடங்களில் முறையான கலந்தாய்வு மூலம் நிரப்ப கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் வேல்முருகன் அவர்கள் விசாரணைக்கு வந்தபோது 207 இடங்களும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது ஆக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

3 கட்ட கலந்தாய்வு காலியிடங்கள் இருந்தால் ஒரு இடத்திற்கு 10 மாணவர்கள் என்ற விகிதத்தில் அறிவிக்கப்படும் எனவும், ஆனால் அந்தப் பட்டியலின் அடிப்படையில் எழுப்பப்பட்டது என தெரியவில்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுவாழ் இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

 

அப்போது பள்ளி படிப்புக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்பவர்கள் மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளை நாடுவது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கையில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஏன் விதிக்கக் கூடாது என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.


Leave a Reply