சமையல் தொழிலாளர்களுக்கு நலவரியம் அமைப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி 8 வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
வீடு இல்லாத சமையல் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கி தருவது, மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இச்சங்கத்தின் தலைவர் முத்து இயல்,இசை, நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது வழங்கும்போது சிறந்த சமையல் தொழிலாளர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






