திருப்பதி அருகே கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மாணவி நேற்று மாலை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த மாணவி இரண்டாம் வருடம் டிப்ளோமோ படித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.சம்பவ இடத்திலே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.