கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தடை..!

டிகர் கார்த்திக் நடிப்பில் உருவான கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதையை இயக்கத்தில் 2019இல் கைதி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது.

 

கைதி திரைப்படத்தின் கதை தன்னுடையது என உரிமை கோரியுள்ள ராஜீவ் ரஞ்சன் என்பவர் 4 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு தொடர்ந்த வழக்கில் கொல்லம் நீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்துள்ளது.

 

கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் தடை விதித்துள்ளார்.