பச்சை மண்டலங்களில் மால்கள், திரையரங்குகளுக்கு அனுமதியளிக்க திட்டம்!?

கொரொனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் கட்டுப்பாடுகள் ஓடும் திரையரங்குகள் மால்களை திறக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

 

கொரொனா பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால்கள் தடைகள் நீடிக்கிறது. இந்த நிலையில் பச்சை மண்டலங்களில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு இவற்றுக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.