கோவை சரவணம்பட்டி அருகே முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் உடல்மீட்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் சரவணம்பட்டியில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது முட்புதரில் இருந்து கட்டப்பட்டிருந்த சாக்கில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அந்த சாக்கை திறந்து பார்த்தபோது அதில் இருந்து அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த பெண் சடலம் ஒன்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சரவணம்பட்டி காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடனே விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது 15 வயது சிறுமி என்பதும் அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது எனக்கூறியுள்ளனர்.