ஊரடங்கு உத்தரவு எதிரொலி.பக்தர்கள் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கிய செம்மேடு கிராம மக்கள் !!!

தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் மலையடிவாரத்தில் ஏராளமான குரங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவைகளுக்கு வழக்கமாக உணவு வழங்குவர். தற்போது கொரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பக்தர்கள் வருகை இல்லை.

 

இதனால் போதிய உணவு இன்றி குரங்குகள் தவித்து வத்தன.இந்நிலையில் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராம மக்கள் ஒன்று கூடி தினமும் ஊர் பகுதியில் வைத்து உணவு சமைத்து பின்னர் கோவில் வளாகத்திற்கு சென்று உணவில்லாமல் தவித்து வரும் குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவை எடுத்து சென்று பாக்கு மட்டையில் வைக்கும் உணவை குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து உணவருந்தி செல்கின்றன.

 

உணவில்லாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு இந்த சமயத்தில் உணவளித்து வரும் மனிதநேயர்கள் ஒரு புறம் இருக்க உணவில்லாமல் தவிக்கும் வாயில்லா ஜீவன்களான இந்த குரங்குகளுக்கும் கருணையோடு உணவு வழங்கி வரும் செம்மேடு கிராம மக்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.