வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரக்கூடிய புத்தாண்டு வாழ்த்து செய்திகள் மூலமாக சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பொதுமக்கள், மொபைல் பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்த்து செய்திகளோடு வரும் லிங்கை கிளிக் செய்தால் செல்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஆகவே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளுக்கு உடனே செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.