தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரளா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்த மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது, பத்தாம் தேதி முதல் 12ம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 93.5 டிகிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.